×

பேச்சிப்பாறையில் 16 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும்

நாகர்கோவில், மார்ச் 17: பேச்சிப்பாறையில் 16 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் என்று கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பீனாகுமாரி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் எஸ்டேட் உள்ளது. இதையொட்டி 16 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை மீட்டு பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட குற்றியாறு, சிற்றாறு போன்ற பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ரப்பர் கழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்றி வருபவர்களுக்கு, அரசின் இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government land ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...