×

கண்ணமங்கலத்தில் எருதுவிடும் திருவிழா ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

கண்ணமங்கலம், மார்ச் 17: கண்ணமங்கலத்தில் எருதுவிடும் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், பேண்டு வாத்தியங்கள், வாண வேடிக்கையுடன் இளைஞர்கள் பரிசு பொருட்களை எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வாடிவாசலை வந்தடைந்தனர்.இதனை தொடர்ந்து நடைபெற்ற காளை விடும் திருவிழாவில், குறிப்பிட்ட தூரத்தை அதிவிரைவாக கடந்த காளைகளுக்கு முதல் மூன்று பரிசுகளாக ₹55 ஆயிரம், ₹45 ஆயிரம், ₹35 ஆயிரம் உள்ளிட்ட 51 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : festival ,Kannamangalam ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...