×

வேலூர் அருகே சென்றபோது ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

வேலூர், மார்ச் 17: வேலூர் அருகே இளம்பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் சுகுமார், விவசாயி. இவரது மனைவி மோனிஷா. கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை மேல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டதால் அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு சுமார் 8.45 மணியளவில் ஆம்புலன்ஸ் வாகனம் வேலூர் வேலப்பாடியை கடந்த போது மோனிஷாவுக்கு பிரசவ வலி கடுமையானதால் அவருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சுகன்யா மற்றும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் ராஜேஷ்குமார் ஆகியோர் பிரசவ சிகிச்சை மேற்கொண்டனர். இதில் மோனிஷாவுக்கு இரவு 8.48 மணிக்கு சுகபிரசவத்திலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : male ,Vellore ,
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...