×

சிற்றார் அணை பகுதியில் மழை

நாகர்கோவில், மார்ச் 13: குமரி மாவட்டத்தில் மீண்டும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் மலையோர பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில இடங்களில் நேற்று காலை வரை லேசான சாரல் மழை பெய்தது. சிற்றார்-1ல் 3 மி.மீ, சிற்றார்-2ல் 2, முள்ளங்கினாவிளையில் 3 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 28 அடியாக இருந்தது. அணைக்கு 216 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 36.90 அடியாக இருந்தது. அணைக்கு 14 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-1ல் 7.67 அடியும், சிற்றார்-2ல் 7.77 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.4 அடியாகும்.

Tags : creek dam area ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி