×

நீதிமன்றத்தில் மகளிர் தினவிழா

விருத்தாசலம், மார்ச் 13: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமை தாங்கினார். கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, உரிமையியல் நீதிபதி மனோகரன், குற்றவியல் நீதிபதி ஆனந்தன், அரசு கூடுதல் மாவட்ட வழக்கறிஞர் விஜயகுமார், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் மகளிர் தின விழாவை முன்னிட்டு நடந்த மகளிர்களுக்கான போட்டிகளில் வெற்றிபெற்ற பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு மகளிர் சாதனைகள் குறித்து பேசப்பட்டது.பெண் வழக்கறிஞர்கள் கணபதி, செல்வி, ஜெய மற்றும் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், அருண், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மகளிர் தின விழா சிறப்பு குறித்து வாழ்த்துரை வழங்கினர்.

Tags : Women's Day ,Court ,
× RELATED மகளிர் தின விழா கொண்டாட்டம்