×

தேவதானப்பட்டியில் காதுகளை பிளக்கும் ஏர்ஹாரன் சத்தம் வாகன ஓட்டிகள் அலறல்

தேவதானப்பட்டி, மார்ச் 13: தேவதானப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களுக்குள் செல்லும் தனியார் பஸ்கள் எழுப்பும் ஏர்ஹாரன் சத்தத்தால் பொதுமக்கள் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். டூவீலரில் செல்பவர்கள் அதிர்ச்சியடைந்து விபத்தில் சிக்குகின்றனர். பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டு மற்றும் ஆண்டிபட்டிக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், வைகைஅணை வழியாக ஆண்டிபட்டி செல்கின்றனர். இதேபோல் பெரியகுளத்தில் இருந்து ஜெயமங்கலம் வந்து பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி வழியாக தேவதானப்பட்டி செல்கின்றனர். இதேபோல் ஜெயமங்கலம் வந்து சில்வார்பட்டி, டி.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, சாத்தாகோவில்பட்டி, செங்குளத்துப்பட்டி, காட்ரோடு,  கட்டகாமன்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்கின்றனர்.

இதேபோல் பெரியகுளத்தில் இருந்து எண்டப்புளி கிராமம், அரசு கல்லூரி, வேல்நகர், தனியார் கல்லூரி, தர்மலிங்கபுரம், தேவதானப்பட்டி, காட்ரோடு, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்கின்றனர்.  இந்த வழித்தடங்களில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த தனியார் பஸ்களில் எழுப்பப்படும் ஒலி ஏர்ஹாரன்கள் அதிக சத்தத்துடன் எழுப்பப்படுகிறது. மேலும் தனியார் பஸ்கள் ஊருக்குள் வரும்போது அதிவேகத்துடன், அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி வருகின்றன. இந்த ஏர்ஹாரன்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்பட்டு வருகிறது.  டூவீலரில் செல்பவர்கள் அதிர்ச்சியடைந்து விபத்தில் சிக்குகின்றனர். ஆகையால் போக்குவரத்து துறை அதிகாரிகள் தேவதானப்பட்டி பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் ஒலி எழுப்பான்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devadanapatti ,
× RELATED வனப்பகுதியில் தீவைத்தவர்கள் கைது