×

இருதரப்பு மோதல் 10 பேர் காயம்

தேவதானப்பட்டி, மார்ச் 13: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் இறந்தவரின் உடலை புதைப்பதற்கு எடுத்துச்செல்லும் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தெய்வம்(35). இவர் காட்ரோடு ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெய்வம் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். இவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர். அப்போது ராமர்கோவில் தெரு பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் மாலைகளை தூக்கி எறிந்துள்ளனர். இதில் மாலை டிரான்ஸ்பார்மரில் பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர்களுக்கும், வடக்கு தெருவைச் சேர்ந்தவர்களுக்கும் அடிதடி ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சேர்ந்த ராஜ்பிரவீன்(23), கவுதமன்(33), பிரித்திவிராஜ்(16), வெங்கடேஷ்(20), அப்பன்ராஜ்(60), செல்வம்(40) உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இருதரப்பு அடிதடி குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : conflict ,
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு