×

சாலையை கடக்க முயன்றவர் சாவு

தேனி, மார்ச் 13: தேனியில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். தேனி அருகே ஊஞ்சாம்பட்டி தென்றல்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(55). இவர் நேற்று முன்தினம் இரவு தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி அதிவேகத்தில் சென்ற வெள்ளைநிற கார் ஒன்று கோவிந்தராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இவ்விபத்தில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இறந்த கோவிந்தராஜின் உறவினர் வடிவேல் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்தும், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sau ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி