×

சாலை பராமரிப்பை தனியாரிடம் விட எதிர்ப்பு நெடுஞ்சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச் 13:சாலை பராமரிப்பு தனியாரிடம் விட எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலை பணியாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன் வழங்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும், பணி நீக்க காலத்துடன் பணி காலத்திலும் இறந்த சாலை பணியாளர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சாலை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் குறித்து கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.

Tags : Anti-Highway Workers ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி