×

மகளிர் குழு தயாரித்த கைவினை பொருட்கள் கண்காட்சி

திருச்சி, மார்ச் 13: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடக்கிறது. திருச்சி கலெக்டர் சிவராசு கண்காட்சியை திறந்து வைத்து பேசியதாவது: மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப்பொருட்கள், தரமானதாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மூலிகைப் உணவுப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், குளிர்பான வகைகள், பேன்ஸி, கைப்பை, சேலைகள், சுடிதார் வகைகள், துண்டுகள், மூங்கில் பொருட்கள், மூலிகை குளியல் சோப்பு வகைகள், மூலிகை இட்லிப்பொடி வகைகள், சாம்பிராணி, ஊதுபத்தி, மண்பாண்ட பொருட்கள், இயற்கை முறையில் உற்பத்தி செய்த தேன், சாவிக்கொத்துகள், தின்பண்டங்கள், சீயக்காய், மாலைகள், பேப்பர் கப், வீட்டு உபயோகப் பொருட்கள், கவரிங் நகைகள் போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக உள்ளது. 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Exhibition ,Women's Group ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!