×

ஆலோசனைக் கூட்டம்

மதுரை, மார்ச் 13: அரசியல் அதிகார அமைப்பின் ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் தரன், சவுந்தரபாண்டி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா, பேராசிரியர் (ஓய்வு) பேச்சிமுத்து, டாக்டர் சேவியர், சுபாஷினி, ரேவதி தலைமை வகித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். அவர்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம், பட்டியல் வெளியேற்றம் என்ற கோரிக்கைை முன் வைத்து அனைத்து தேவேந்திர குல வேளாளர் அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒன்று கூடி கூட்டணி அமைத்து செயல்படுவோம். இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் வரும் 2021 தேர்தலில் அரசியல் அதிகார அமைப்பு சார்பில் ரிசர்வ் தொகுதியை தவிர்த்து பொதுத்தொகுதியில் போட்டியிட்டு தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்கு வலிமையை நிரூபிப்போம். பிற சமூகத்தினரோடு இணக்கம் காணும் வகையில் பொது சேவை உணர்வோடு சமூகக் கலாச்சார பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...