×

பழநியில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

பழநி, மார்ச் 13: பழநி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.பழநி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடந்தது. பழநி நகராட்சி ஆணையர் லட்சுமணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜேஸ்வரி. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல்வகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திரையங்குகள் மற்றும் விடுதிகளை பராமரிக்கும் முறைகள், கிரிமிநாசினி தெளிக்கும் விதம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள், திருமண மண்டபம், ஹோட்டல் மற்றும் வாகன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corona Awareness Meeting ,Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்