வத்தலக்குண்டு, மார்ச் 13: வத்தலக்குண்டு அருகே சோலார் பார்க் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் திரண்டு சென்று போலீசில் மனுக் கொடுத்தனர். வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டி ஊராட்சியில் உள்ளது வி.உச்சப்பட்டி. இங்கு 216 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயத்தையும், ஆடு, மாடுகள் வளர்ப்பதையும் தொழிலாக கொண்டுள்ளனர். இவ்வூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தினர் சோலார் பார்க் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.