பொன்னமராவதி, மார்ச் 13: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் வளர் இளம்பெண்கள் மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கண்டியாநத்தம் அங்கன்வாடி பணியாளர் ராசாத்தி தலைமையில் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்று அங்கன்வாடி மையத்தில் தொடங்கி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வளர்இளம்பெண்கள் மற்றும் கொரோனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி சென்றனர்.