×

டிரைவர் கைது ஆலங்குடி அருகே பாதையை அடைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 13: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாட்டில் 50 ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தேர்தல் தோல்வியின் காரணமாக தனிநபர் ஒருவர் அடைத்து விட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்திலுள்ள மாங்குடிபட்டி, தெற்குப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகாலமாக அவ்வழியே உள்ள பாதையில் கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சென்று வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு உள்ளார். ஆனால் குறைந்த வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்ற நிலையில் விரக்தி அடைந்த அவர் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மரங்கள் மற்றும் தென்னை மட்டைகளை போட்டு அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. 50 ஆண்டு காலமாக மக்களின் பயன்பாட்டில் உள்ள சாலை அடைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திலும் வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் இதுவரையில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : arrest demonstration ,Alangudi ,
× RELATED ஆலங்குடியில் இல்லம் தோறும் ஸ்டாலின்...