×

குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை

பாடாலூர், மார்ச் 13:ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மனோகரன் (45). இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த மனோகரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மனோகரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை