×

பொன்பரப்பி பகுதியில் பரபரப்பு மூதாட்டியை சரமாரியாக வெட்டிய சைக்கோ வாலிபருக்கு தர்மஅடி

அரியலூர், மார்ச் 13: பொன்பரப்பியில் மூதாட்டியை சரமாரியாக கத்தியால் வெட்டிய சைக்கோ வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தர்மடிவாங்கியசைக்கோநபர்குறித்துசெந்துறைபோலீசார்விசாரணைநடத்திவருகின்றனர். செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் கத்தியுடன் சைக்கோ வாலிபர் சுற்றி திரிந்தார். நேற்று மாலை பொன்பரப்பி கிழக்கு தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி ராமாமிர்தம் (70) என்பவரை கத்தியால் தலை, கால்களில் சரமாரியாக சைக்கோ வாலிபர் வெட்டினார். அப்போது ராமாமிர்தம் சத்தம் போட்டதால் பொதுமக்கள் ஓடிவந்து சைக்கோ வாலிபரை பிடிக்க முயன்றனர்.

அப்போது அருகில் இருந்த ஏரியில் ஓடினார். இதையடுத்து சைக்கோ வாலிபரை விரட்டி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் படுகாயமடைந்த ராமாமிர்தத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் தர்மடி கொடுத்த வாலிபரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் போலீசில் ஏற்ற முயன்றனர். அப்போது ராமாமிர்தம் இறந்ததாக வந்த தகவலையடுத்து பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் முன் மரக்கட்டைகளை போட்டு தடுத்தனர். மேலும் ஆம்புலன்ஸ் கண்ணாடியை மக்கள் உடைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ராமாமிர்தம் இறந்ததாக வந்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சைக்கோ வாலிபர் எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் பேசாததால் பெயர் தெரியவில்லை.

Tags : grandfather ,area ,Ponparappi ,
× RELATED வாட்டி வதைக்கும்...