மீன்சுருட்டி, மார்ச் 13: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிப்பள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலையரசி (27). இவர் உள்ளூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்திராபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். உத்திராபதி தினம்தோறும் மனைவியை அடித்து தகராறு செய்து வந்தார்.
இதனால் கலையரசி கோபித்து கொண்டு தனது தந்தையின் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை உத்திராபதி தனது மனைவியின் வீட்டின் முன்பு நின்று கலையரசியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் கலையரசி புகார் செய்தார். மீன்சுருட்டி சப்இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிந்து உத்திராபதியை கைது செய்தார்.