×

தரங்கம்பாடி அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை பட்டப்பகலில் பூட்டை உடைத்து துணிகரம்

தரங்கம்பாடி, மார்ச் 13: அரசு போக்குவரத்து கழக டிரைவர் வீட்டில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 12பவுன் தங்க நகை, ரூ.15ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் ராஜ்மோகன். இவர் பொறையார் பக்கமுள்ள எருக்கட்டாஞ்சோி கிராமத்தில் வடக்கு வீதியில் ஒரு வீட்டின் மாடி பகுதியில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மகளும் வெளியூர் சென்றுவிட்டார்.

அவரது மனைவி காரைக்காலுக்கு உறவினரை பார்க்க சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மா்ம நபர்கள் மாடி ஏறி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவையும் உடைத்து பீரோவில் இருந்த 12பவுன் தங்க நகை மற்றும் ரூ.15ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டனர். மாலை வீடு திரும்பிய அவரது மனைவி வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வேலைக்கு சென்று கணவர் ராஜ்மோகனுக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த ராஜ்மோகன் பொறையார் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சீர்காழி டி.எஸ்.பி (பொறுப்பு) சாமிநாதன், பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நாகையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து, கதவு, பீரோ உள்ளிட்ட பகுதியில் கைரேகையை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Jewel ,robbery ,government bus driver ,house ,Tharangambadi ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...