×

கரூர் அரசு கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர், மார்ச் 13: கரூர் அரசு கலைக் கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் கொரோனா வைரஸ் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுககு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆங்கிலத்துறை தலைவர் அலெக்சாண்டர், பொருளியல் துறை தலைவர் ஜெகதீஸ்பாண்டி முகுந்தன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Karur Government College ,
× RELATED கலெக்டர் துவக்கி வைப்பு கரூரில் அரசு...