×

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் குழாய் சீரமைப்பு தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

கரூர், மார்ச் 13: குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் ஜவகர்கடைவீதி காமராஜ்மார்க்கெட் அருகே குடிநீர் குழாய் உடைந்தது. ஒருமாதமாக தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளம் தோண்டி சீரமைப்பு வேலை நடைபெற்றது. எனினும் பணியை இன்னமும் நிறைவு செய்யவில்லை. திறந்தநிலையில் பள்ளம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளும் தடுமாற்றம் அடைகின்றனர். உடைந்த குழாயை சரிசெய்து சாலையை துரிதமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : activists ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...