×

காதல் திருமணம் செய்து கடத்தப்பட்ட இளம்பெண் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை

மேட்டூர்,  மார்ச் 13: மேட்டூர் அடுத்த கொளத்தூரில் காதல் திருமணம் செய்து  கடத்தப்பட்ட இளம்பெண் குறித்து, அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில், பேலீசார் தனிப்படை அடுத்து தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானி  அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜெகன்நாதன் மகள் இளமதி (23).  கேஸ் ஏஜென்சியில் பணியாற்றி வந்தார். கவுந்தப்பாடியை சேர்ந்த  பழனிசாமி மகன் செல்வம் (26). இவர் மில்லில் வேலை செய்து வந்தார். இளமதியும்,  செல்வமும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள்  என்பதால், இவர்கள் காதலுக்கு இளமதியின் பெற்றோர் மத்தியில் கடும்  எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை  விட்டு வெளியேறிய இருவரும், மேட்டூர் அடுத்த கொளத்தூரை சேர்ந்த திராவிடர்  விடுதலை கழக மாநில அமைப்பாளர் ஈஸ்வரன் என்பவர் தலைமையில், திருமணம் செய்து  கொண்டனர்.

இதனை அறிந்த இளமதியின் பெற்றோர்,  ஈஸ்வரன் வீட்டிற்கு  சென்று, அங்கிருந்த ஈஸ்வரனை காரில் கடத்தி சென்றனர். மேலும்  பருத்திக்காட்டில் இருந்த இளமதியையும், வலுகட்டாயமாக காரில் தூக்கி போட்டு  பவானிக்கு சென்றனர். இந்நிலையில், மேட்டூர் 4 ரோடு பகுதியில் போலீசார்  ஈஸ்வரனை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து ஜெகன்நாதன் உள்பட 18 பேரை கைது செய்தனர். மேலும், செல்வம் கொடுத்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து இளமதியை  தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : teenager ,teen ,
× RELATED முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘