×

திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, மார்ச் 13: திருச்செங்கோட்டில், வருகிற 15ம் தேதி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது.இதில் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற 15ம் தேதி காலை 10 மணிக்கு, திருச்செங்கோடு சிஎச்பி காலனியில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட  திமுக அலுவலகத்தில், மேற்கு  மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடக்கிறது.

பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துதல், திமுக தலைவர் பிறந்த நாள் விழா, 15வது  உட்கிளைத்தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள்  குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே, இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : DMK Working Committee Meeting ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்