×

நரசிம்மசாமி கோயில் உண்டியலில் ரூ16 லட்சம் காணிக்கை

நாமக்கல்,  மார்ச் 13:நரசிம்ம கோயில் உண்டியல் திறந்து பக்தர்களின் காணிக்கை  எண்ணப்பட்டது. இதில் ₹16 லட்சம், பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். நாமக்கல்  நரசிம்ம கோயிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  பக்தர்கள் காணிக்கை செலுத்த கோயில் வளாகத்தில், உண்டியல்கள்  வைக்கப்பட்டுள்ளன.இந்த உண்டியல்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை எண்ணப்படும். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரமேஷ், உமாதேவி  ஆகியோர் முன்னிலையில், நேற்று கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு  எண்ணப்பட்டது. அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ₹16 லட்சம், 65 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.

Tags : Narasimhaswamy ,
× RELATED நரசிம்மசுவாமி கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா