×

ஓசூரை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி குடும்பத்துக்கு தலா ₹10 லட்சம் இழப்பீடு

ஓசூர், மார்ச் 13:  விபத்தில் சிக்கி உயிரிழந்த ஓசூரை சேர்ந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென சட்டப்பேரவையில் சத்யா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா சட்டப்பேரவையில் பேசுகையில், `கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.குருபரப்பள்ளி ஊராட்சி சீக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் 9 பேர் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தனர். இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹10 லட்சம் வழங்க வேண்டும். மேலும், அந்த  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்` என வலியுறுத்தினார்.

Tags : accident ,Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு