×

நகராட்சி பள்ளிக்கு தானியங்கி பெல்

கிருஷ்ணகிரி, மார்ச் 13:  கிருஷ்ணகிரி நகராட்சி பள்ளிக்கு தானியங்கி பெல் நன்கொடையாக வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி  பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான பல்வேறு பொருட்களை,  முன்னாள் மாணவர்கள் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். அதன்படி, முன்னாள்  மாணவர் சொக்கலிங்கம், தனது சொந்த செலவில் தானியங்கி மணி(ஆட்டோமெட்டிக்  பெல்) ஒன்றை நன்கொடையாக வழங்கினார். இவர் தற்போது கே.பூசாரிப்பட்டி அரசு  உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரை, பள்ளியின் இறை வணக்க கூட்டத்தின் போது, தலைமை  ஆசிரியர் வடிவேலு பாராட்டி, பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.  நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  கலந்துகொண்டனர்.

Tags : school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி