×

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 13:  கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையில், தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச் செம்மல்” என்ற விருது வழங்கப்படுகிறது. அதன்படி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 மாவட்டங்களில் இருந்து 32 பேரைத் தேர்வு செய்து, தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ₹25 ஆயிரம் பரிசுத்தொகையும், தகுதியுரையும் 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து, அவர்களிடமிருந்து தன் விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை பெற்று, அதில் தகுதியானவர்களின் விண்ணப்பங்களை தொகுத்து அனுப்புமாறு, சென்னைத் தமிழ் வளர்ச்சி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2020ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பம், தமிழ் வளர்ச்சித் துறையின் ஷ்ஷ்ஷ்.tணீனீவீறீஸ்ணீறீணீக்ஷீநீலீவீtலீuக்ஷீணீவீ.நீஷீனீ என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தன் விவரக் குறிப்பு, அவற்றுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன், கிருஷ்ணகிரி  கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளைக்குள்(13ம் தேதி) சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது