×

ரயில் மோதி முதியவர் பலி

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில், 63வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று முன்தினம் மாலை சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து தர்மபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சடலமாக மீட்கப்பட்டவர் சேலம் பாலக்குட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரன்(63) என்பதும், அவர் தண்டவாளத்தை கடந்த போது, ரயில் மோதி உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா