×

பாலக்கோட்டில் சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு

பாலக்கோடு, மார்ச் 13: பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட பேளாரஅள்ளி சாலை, எருமாம்பட்டி சாலை, மொரப்பூர்- மாரண்டஅள்ளி சாலை, எக்காண்டஅள்ளி- தீர்த்தாரப்பட்டி சாலை, கூலிகானூர்- உடையாண்டஅள்ளி சாலை, தர்மபுரி- பாப்பாரப்ட்டி சாலை போன்ற சாலைகள் 2019-2020ம் ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் மூலம் விரிவாக்கம் மற்றும் மேம்பாடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேற்படி பணிகள் நெடுஞ்சாலைத்துறை சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தர்மபுரி கோட்ட பொறியாளர் தனசேகரன், உதவி கோட்ட பொறியாளர் ராஜகாந்தன், உதவி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Palakkad ,
× RELATED கோடை வறட்சி எதிரொலி: ஆறுகள், அணைகள் வற்றின