×

போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் குழந்தைகளுக்கு, காவல்துறை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்நிலையத்தில் பணியாற்றும் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி எஸ்பி ராஜன், தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்ஐகள் மற்றும் தலைமை காவலர்களாக பணியாற்றும் 20பேரின் குழந்தைகள், பல் மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவம், பொறியியல் கல்வி, இளங்கலை அறிவியல் என வெவ்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி படித்து வரும் இவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த மாணவர்களுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம், மொத்தம் கல்வி ஊக்கத்தொகைக்கான காசோலையை, மாவட்ட எஸ்பி ராஜன், போலீசாரிடம் வழங்கினார்.

Tags : police children ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா