×

வெங்கல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ஊத்துக்கோட்டை, மார்ச் 13: பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் நேற்று திறக்கப்பட்டது. பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் ₹22 லட்சம் செலவில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இது திறக்கப்படாமல் மூடியே கிடந்தது.  இந்த துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், துணை சுகாதார நிலைம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன் தலைமை தாங்கினார்.

டாக்டர் கவுரி, கூட்டுறவு சங்க இயக்குனர் ஜி.பாஸ்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மர்த்தால் மனோன்மணி,  ஊராட்சி செயலாளர் உமாகாந்த், ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  மாவட்ட கவுன்சிலர் அம்மினி மகேந்திரன் சுகாதார நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

Tags : health center ,Vengel village ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு