பூந்தமல்லி, மார்ச் 13: போரூரில் உள்ள பழமையான ராமநாதீஸ்வரர் கோயிலில் ஏழுமலை என்பவர் இரவு காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஏழுமலை கோயிலின் முன்புறம் பாதுகாப்பு பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஏழுமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போரூர் காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்தார். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.