×

ராஜகிரி அய்யனார் கோயில் அருகே வேகத்தடையில் வெள்ளை கோடு அழிந்ததால் அடிக்கடி விபத்து

பாபநாசம், மார்ச் 13: ராஜகிரி அய்யனார் கோயில் அருகே 2 வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் அழிந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையில் பாபநாசம் அடுத்த ராஜகிரியில் அய்யனார் கோயில் அருகில் 2 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் அடிக்கப்பட்டிருந்த வர்ணம் அழிந்ததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ராஜகிரி அய்யனார் கோயில் அருகில் உள்ள 2 வேகத்தடைகளிலும் விரைவில் அழியாத வண்ணம் வர்ணம் அடிக்க வேண்டும். மேலும் வேகத்தடை அருகில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,speed barrier ,Rajagiri Ayyanar Temple ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...