×

தாறுமாறாக வந்த கார் மோதியதில் இ சேவை மைய கட்டிடம் முன் படுத்து தூங்கிய மூதாட்டி பலி

கும்பகோணம், மார்ச் 13: கும்பகோணம் அருகே பெரப்படி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுசீலா (60). இவரது ஒரே மகள் சென்னையில் உள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த சுசீலா சம்பவத்தன்று இரவு காற்றுக்காக அப்பகுதியில் உள்ள இ சேவை மைய கட்டிடம் முன் படுத்திருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக தாறுமாறாக வந்த கார், இ சேவை மைய கட்டிடத்துக்குள் புகுந்து சுசீலா மீது மோதியது.இதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : service center building ,car crash ,
× RELATED கடலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி...