×

ராஷ்டிரிய ராணுவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தகுதித் தேர்வு

தூத்துக்குடி, மார்ச் 13: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வுக்கு மார்ச் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி (டெராடூன்) 2021 சேர்க்கை தகுதித் தேர்வுக்கு 02-.01.-2008 க்கு பின்னதாகவும், 01-.07-.2009-க்கு முன்னதாகவும் பிறந்தவர்களும், 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் விண்ணப்பிக்கலாம். தகுதித் தேர்வு 2020 ஜூன் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது.

விண்ணப்பத்தினை The Commandant, RIMC, Garhi Cantt, Dehradun - 248003, Uttarakhand State என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டைபிரதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்திற்கு 31.03.2020 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.rimc.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா