தூத்துக்குடி, மார்ச் 13: குருப் 2, 4 ஆகிய போட்டித் தேர்வுகளுக்குகான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் இன்று (13ம் தேதி) முதல் துவங்குகிறது.
தூத்துக்குடி போல்பேட்டையில் செயல்படும் கின்ஸ் அகாடமி, மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை கின்ஸ் அகாடமியில் பயின்ற 250க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் அரசு பணியிடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு கின்ஸ் அகாடமியில் இன்று (13ம் தேதி) முதல் துவங்குகிறது.
கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து வரவேற்கிறார். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று பயிற்சி டிஎஸ்பியான அமல அட்வின், இலவச பயிற்சி வகுப்புகளை துவக்கிவைத்துப் பேசுகிறார். இதில் தென்காசி கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் முத்துசாமி, சார் பதிவாளர் இளமாறன் முன்னிலை வகிக்கின்றனர். இதில் அகாடமி பயிற்றுநர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.