×

காஞ்சி மாவட்டத்தில் இருந்து பிரிந்து செங்கை மாவட்ட ஓய்வூதியர் சங்கம் துவக்கம்

காஞ்சிபுரம், மார்ச் 13: காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு வருவாய் மாவட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி ஓய்வூதியர் சங்க செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாநில துணை தலைவர் சீத்தாரமன் தலைமை தாங்கி தேர்தல் அலுவலராகவும் செயல்பட்டார். மாநில பொருளாளர் காளிங்கராயன், தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகம், மாநில மகளிரணி மண்டோதரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பக்தவச்சலம், தேவசித்தம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

இந்த தேர்தலில் செங்கல்பட்டு மாவட்ட தலைவராக ஜேம்ஸ் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்களாக ஜெயபால், நாகராஜ், தரன், மாவட்ட மகளிரணி செயலாளராக சித்ராதேவி, மாவட்ட செயலாளராக ராஜ்குமார், மாவட்ட பொருளாளராக ஜோசப், மாவட்ட பிரசார செயலாளராக சி.காசி, மாவட்ட அமைப்பு செயலாளராக வி.காசி, மத்திய செயற்குழு உறுப்பினராக பழனி தண்டபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Kanchi District ,
× RELATED உத்திரமேரூர் தனியார் கல்லூரியில் அமுத கலச யாத்திரை பேரணி