×

சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளிகள் விபரம் சேகரிக்க உத்தரவு

ஈரோடு, மார்ச் 13:  ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக பள்ளிகள் மாறிவிடுகிறது. பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகள் பட்டியல் அனுப்பி வைக்க தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளியின் பெயர், சுற்றுச்சுவர் தேவைப்படும் அளவு உள்ளிட்ட விபரங்களை அனைத்து பள்ளிகளில் இருந்தும் தவறாமல் அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : non-state schools ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு