×

தீவனம் தட்டுப்பாடின்றி கிடைப்பதால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு, மார்ச் 13: கோடைகாலம் துவங்கிய நிலையிலும் தட்டுப்பாடின்றி தீவனம் கிடைப்பதால் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் நேற்று மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இருப்பினும், 85 சதவீதம் மாடுகள் விற்பனையானது.ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். சந்தையில் 300 பசுமாடுகளும், 150 எருமை மாடுகளும், 100 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. வழக்கமாக, கோடைக்காலம் தொடங்கினால் தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டு மாடுகளை விற்பனை செய்வதற்காக  அதிகமாக கொண்டு வருவார்கள். தற்போது தீவனம் பற்றாக்குறை இல்லாமல் கிடைத்து வருவதால் நேற்று நடந்த சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.  

கொரோனா வைரஸ் பாதிப்பு கேரள மாநிலத்தில் அதிக இருப்பதால் வியாபாரிகள் அதிகமாக வரவில்லை. இதேபோல், மகாராஷ்டிராவில் இருந்தும் வியாபாரிகள் வரவில்லை. மாடுகள் வரத்து குறைந்த போதும் விற்பனை வழக்கம்போல 85 சதவீதமாக இருந்தது. இதுகுறித்து மாட்டுச்சந்தை வியாபாரிகள் கூறுகையில்,`கடந்த வாரங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் திருவிழா நடந்ததால் மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. இந்த வாரம் அதிகரிக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தீவனம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருவதால் மாடுகளை விற்பனை செய்ய வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. இதனால், வரத்து குறைந்த நிலையிலேயே இருந்து வருகிறது. தீவன தட்டுப்பாடு அதிகரிக்கும்போது தான் மாடுகள் வரத்து அதிகரிக்கும்’ என்றனர்.

Tags : Karungalpalayam ,
× RELATED பறக்கும் படை அதிகாரிகளின்...