×

திருவாரூர் கிடாரங்கொண்டான் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 18,000 டன் நெல் மூட்டைகள்

திருவாரூர், மார்ச் 13: திருவாரூர் மாவட்டத்தில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் கிடங்குகளில் கொண்டு வந்து அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் மொத்தம் 463 அரசு கொள்முதல் நிலைங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேற்று முன்தினம் வரையில் 4 லட்சத்து 85 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் இருந்து வரும் திறந்த வெளி கிடங்குகளில் நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் கொண்டு வந்து அடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நேற்று வரையில் இந்த திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 18 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.




Tags : Thiruvarur Kitarakondan Open Space Warehouse ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...