×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முத்துப்பேட்டையில் நூதன ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை, மார்ச் 13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழக சட்டமன்றத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் பேசி வந்த அய்யாவழி பாலமுருகன் கைது சம்பவத்தை கண்டித்தும், கோவையில் பள்ளி வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்தும், கோவை எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்தும் நீதி தேவதை சிலையுடன் நூதன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை ஜெர்மன் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பு நிர்வாகிகள் அனைத்து ஜாமத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் கருத்தப்பா சித்திக் வரவேற்று பேசினார்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளர் ஆரூரான் சாதிக், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வக்கீல் தீன்முகமது, தமுமுக தலைவர் சம்சுதீன் உட்பட பலரும் கண்டித்து பேசினர். மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைத்தலைவர் அன்சாரி, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.


Tags : demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்