×

சென்னை விமான நிலையத்தில் அச்சக மை பார்சலில் தங்க குண்டுகள்: மும்பை ஆசாமியிடம் விசாரணை

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வந்த பார்சலில் அச்சக மைக்குள் சிறு, சிறு தங்க குண்டுகள் இருப்பது தெரிந்தது. சுங்க அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சார்ஜாவில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கூரியர் பார்சல்கள் வந்தன. அதனை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பார்சலில் அச்சக தொழிலுக்கு பயன்படும் மெட்டல் மை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதனை திறந்து பார்த்தபோது, அதனுள் மெட்டல் மையுடன் சிறு, சிறு தங்க உருண்டைகள் அதிகளவில் இருந்தன.

இதன் மொத்த எடை 521 கிராம். இதன் மதிப்பு ரூ22.5 லட்சம். இதையடுத்து அந்த தங்க குண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மும்பை தானே பகுதியை சேர்ந்த ஒரு ஆசாமி சென்னையில் உள்ள ஒரு போலி முகவரி கொடுத்து இந்த கூரியர் பார்சலை வரவழைத்தது தெரியவந்தது. நேற்று மாலை மும்பை ஆசாமியை  பிடித்து தனி இடத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் இந்த பார்சலை அனுப்பியது யார், அவர் யாருக்காக அனுப்பி வைத்தார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : airport ,Akshaya ,investigation ,Chennai ,Asami ,Mumbai ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...