தண்டையார்பேட்டை: வட சென்னை பகுதியில் குற்றங்களை தடுக்க 64 நவீன கண்காணிப்பு கேமராக்களை மாநகர கமிஷனர் இயக்கி வைத்தார். வடசென்னைக்கு உட்பட்ட பாரிமுனை, பிராட்வே, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மாதவரம், மணலி ஆகிய பகுதிகளில் திருட்டு, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கவும், விபத்துகளை கட்டுப்படுத்தவும் வடசென்னை போக்குவரத்துத்துறை சார்பில் ரூ12 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 64 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி பாரிமுனையில் நேற்று நடந்தது. வடசென்னை போக்குவரத்து துணை ஆணையர் ராஜசேகர் தலைமை வகித்தார். சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைத்து பார்வையிட்டார்.