×

2 ரவுடிகளுக்கு 289 நாள் சிறை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அஜித்குமார் (22), சாமுவேல் (22). ரவுடிகளான 2 பேரும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள். இந்த 2 பேரும் கடந்த டிசம்பர் மாதம் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் முன்பு ஆஜராகி, அடுத்த ஒரு வருடத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம், என நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் கையெத்திட்டு சென்றுள்ளனர். இந்தநிலையில், இதை மீறி, 2 இருவரும் ஆதம்பாக்கத்தில் திருட்டில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து நன்னடத்தை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதால் அஜித்குமாருக்கு 204 நாளும், சாமுவேலுக்கு 289 நாளும், ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க துணை கமிஷனர் பிரபாகர் பரிந்துரைத்தார். அதன்படி, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : rowers ,
× RELATED காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே...