×

வேலூர் மத்திய சிறை ஜெயிலர் பொறுப்பேற்பு

வேலூர், மார்ச் 13: வேலூர் மத்திய சிறை ஜெயிலர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஜெயிலராக பணியாற்றி வந்த ராஜேந்திரன், சென்னை புழல் சிறைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கடலூர் மத்திய சிறை ஜெயிலராக பணியாற்றிய மோகன் குமார் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறை ஜெயிலராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு சிறை காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Vellore Central Jail ,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது