×

குடியாத்தத்தில் அர்ஜூன் சம்பத் பேட்டி மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் முறையை அதிகரிக்கவேண்டும்

குடியாத்தம், மார்ச் 13: இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் குடியாத்தத்தில் நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,  கடை பலகையின் பெயர்கள் தமிழில் இருக்கவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை வரவேற்கிறேன். தமிழ் மொழிப்பாடங்களை பள்ளிகளில்  மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை அதிகரித்து அவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊட்டவேண்டும். கொரோனா வைரஸ்ஸுக்கு தமிழ் பாரம்பரிய வைத்தியங்கள் நிறைய உள்ளது. அதேபோல், இரு கைகள் கூப்பி வணங்குவதுதான் தமிழ் மரபு. வெளிநாடுகளைப்போல் கை குலுக்குவது உள்ளிட்ட கலாசாரங்களை தவிர்க்கப்படவேண்டும் என்றார்.

Tags : Arjun Sampath ,Tamil Nadu ,
× RELATED சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு...