×

கடையம் அருகே பம்ப்ஷெட்டில் புகுந்த 6 அடி பாம்பு சிக்கியது

கடையம், மார்ச் 12: கடையம் அருகே பம்ப்ஷெட்டில் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். கடையம் அருகே சிவசைலம் பகுதியில் சுப்பிரமணியன் என்பரவது தோட்டம் உள்ளது. இங்குள்ள பம்ப்ஷெட்டில், பாம்பு புகுந்ததாக கடையம் வனத்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. கடையம் வனச்சரக அலுவலர்  நெல்லை நாயகம் உத்தரவுப்படி பயிற்சி வனச்சரக அலுவலர்கள் ரவி, பூவேந்திரன், வேட்டை தடுப்பு காவலர் வேல்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பம்ப்ஷெட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து சிவசைலம் பீட் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Tags : shop ,
× RELATED மது பாட்டில்களை மொத்த விற்பனை...