×

கோவில்பட்டி அருகே காட்டுத்தீ

கோவில்பட்டி, மார்ச் 12: கோவில்பட்டி அருகே அப்பனேரி, புதூர் லெட்சுமியாபுரம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் புல்வெளிகள் தீயில் எரிந்து நாசமானது. கோவில்பட்டி அருகே உள்ளது அப்பனேரி, புதூர் லெட்சுமியாபுரம் கிராமங்கள். இந்நிலையில் நேற்று மதியம் இந்த கிராமப்புற வயல்பகுதிகளில்  காட்டுத்தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ விளைநிலங்களில் உள்ள புல்வெளிகள் பற்றி எரிந்தது.தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று, காட்டுத்தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் அந்த பகுதியில் பருத்தி பயிரிடப்பட்டிருந்த வயல்வெளிகள், சோளநாத்து படப்புகள் தீயில் இருந்து தப்பியது.



Tags : Kovilpatti ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா