கோவில்பட்டி, மார்ச் 12: கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கல்லூரியில் ஊடக பொருட்களின் நவீன தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். இயற்பியல்துறை உதவி பேராசிரியர் லட்சுமணபெருமாள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். நைஜீரியா அகின்டோ தொழில்நுட்ப பல்கலைக்கழக டிப்பான்ட்மென்ட் ஆப் ப்யூர் அன்ட் அப்ளைடு பிசிக்ஸ் டாக்டர் ஒலுவாசுயுன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உயர் அழுத்த ஆராய்ச்சி மைய கோ ஆர்டினேட்டர் ஆறுமுகம் ஆகியோர் நவீன தொழில்நுட்பம் ஊடக பொருட்கள் எவ்வாறு விரிவடைந்துள்ளது பற்றி பேசினர். இயற்பியல் துறை தலைவர் மோகன் நன்றி கூறினார்.