×

சீர்காழி அருகே காயங்களுடன் புள்ளிமான் மீட்பு

சீர்காழி, மார்ச் 12: நாகை மாவட்டம் சீர்காழி அருகே புதுப்பட்டினம் ஆற்றங்கரை தெருவில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் மூன்று வயது உடைய புள்ளிமான் ஒன்று சுற்றி திரிந்தது.இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அந்த மானை மீட்டு சிகிச்சை அளிக்க நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் கலாநிதி உத்தரவிட்டார். அதன்பேரில் சீர்காழி வனத்துறை ரேஞ்சர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று காயமடைந்த புள்ளி மானை மீட்டு, சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் மானை வனத்துறையினர் வாகனம் மூலம் கொண்டு சென்று கோடியக்காடு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்

Tags : recovery ,Sirkazhi ,
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...